search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dry land"

    • சக்கரக்கோட்டை கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறுகிறது.
    • நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ.கோரிக்கை விடுத்துள்ளது.

    கீழக்கரை

    தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறிக்கொண்டிருக்கும் பறவைகள் சரணாலயமான சக்கரக்கோட்டை கண்மாயை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாத புரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரிய பட்டினம் ரியாஸ்கான் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளின் சரணாலயமாக திகழும் சக்கரைக்கோட்டை கண்மாயில் தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டது.

    பறவைகள் தண்ணீரின்றி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அந்த கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளிலும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் நகரிலும் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலை தொடரும் பட்சத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாக நேரிடும். இந்த கண்மாயில் முறையாக தூர்வாரும் பணி கடந்த வருடங்களில் நடைபெ றாததே இதற்கு காரணம்.

    தற்போது தண்ணீர் முழுவதும் வற்றிவிட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்மாயை ஆக்கிரமித்து இருக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனே செய்ய வேண்டும்.

    • அபிராமம் பகுதியில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள தரைக்குடி, வல்லகுளம் தேவநேரி அச்சங்குளம் உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மிளகாய் பயிரிட்டனர்.

    இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லததால் விவசாயிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை யின்றி செடியிலேயே மிளகாய் சோடையாகி போனது. இதனால் விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து மிளகாய் பறித்து உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமங்களில் உலர்களங்கள் வசதி இல்லாததால் விவசாயிகள் நிலம், சாலையோரம் கால்வாய் புறம்போக்கு வாய்க்கால்புறம்போக்கு போன்ற இடங்களில் மிளகாய் மற்றும் சிறுதானியங்களை உலர வைக்கின்றனர். உலர்களம் இல்லாமல் மண் தரையில் உளர வைப்பதால் மிளகாயின் தரம் குறைவதால் மிளகாய் விலை குறையும் நிலை உள்ளது.

    இதனால் அபிராமத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உலர் களங்கள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×