என் மலர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கண்காட்சி"
- கண்காட்சி வாகனத்தை அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்கள்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கண்காட்சி வாகனத்தை அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர்.இளங ்கோ,போக்குவரத்துகழக தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், சேட்டு,காந்தி,பெருமாள், செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து அரூர் பேருந்து நிலையம், மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்ட இந்த வாகனத்தில் சாலை பாதுகாப்பு குறித்தும் விபத்தின்றி வாகனம் இயக்குவது குறித்த புகைப்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் இயக்கி காண்பிக்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு வாகனம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் பள்ளிகளுக்கு சென்றது அங்கு மாணவ,மாணவியர்கள் பார்வையிட்டனா்.
- அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் நடந்தது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்காட்சி மூலம் விளக்கி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிப்போம் சந்தோஷமாய் இருப்போம், பாதுகாப்பான இயக்கமே நிறுவன வருவாய், அளவான வேகமே ஆயிலை அதிகரிக்கும், பொது வாக னத்தை பயன்படுத்துவோம் தனி வாகனத்தை தவிர்ப்போம், சாலை விதிகளை மதிப்போம் வேதனைகளை தவிர்ப்போம்.
நடைபாதையில் நடப்போம் நலமுடன் பயணிப்போம் போன்ற வாசகங்களை ஒட்டிய பேனர்களுடன் அரசு போக் குவரத்து கழகத்தினுடைய பஸ்சில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை டிரைவர்கள், பயிற்சியாளர் அத்தவாசி ரகுராமன், ஆரணி புருஷோத்தமன், செய்யாறு மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பிரபாகரன், மலர், சாதிக் மற்றும் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






