என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

    • அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் நடந்தது
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்காட்சி மூலம் விளக்கி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிப்போம் சந்தோஷமாய் இருப்போம், பாதுகாப்பான இயக்கமே நிறுவன வருவாய், அளவான வேகமே ஆயிலை அதிகரிக்கும், பொது வாக னத்தை பயன்படுத்துவோம் தனி வாகனத்தை தவிர்ப்போம், சாலை விதிகளை மதிப்போம் வேதனைகளை தவிர்ப்போம்.

    நடைபாதையில் நடப்போம் நலமுடன் பயணிப்போம் போன்ற வாசகங்களை ஒட்டிய பேனர்களுடன் அரசு போக் குவரத்து கழகத்தினுடைய பஸ்சில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை டிரைவர்கள், பயிற்சியாளர் அத்தவாசி ரகுராமன், ஆரணி புருஷோத்தமன், செய்யாறு மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.

    சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பிரபாகரன், மலர், சாதிக் மற்றும் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×