என் மலர்
நீங்கள் தேடியது "Awareness Fair"
- அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் நடந்தது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்காட்சி மூலம் விளக்கி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிப்போம் சந்தோஷமாய் இருப்போம், பாதுகாப்பான இயக்கமே நிறுவன வருவாய், அளவான வேகமே ஆயிலை அதிகரிக்கும், பொது வாக னத்தை பயன்படுத்துவோம் தனி வாகனத்தை தவிர்ப்போம், சாலை விதிகளை மதிப்போம் வேதனைகளை தவிர்ப்போம்.
நடைபாதையில் நடப்போம் நலமுடன் பயணிப்போம் போன்ற வாசகங்களை ஒட்டிய பேனர்களுடன் அரசு போக் குவரத்து கழகத்தினுடைய பஸ்சில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை டிரைவர்கள், பயிற்சியாளர் அத்தவாசி ரகுராமன், ஆரணி புருஷோத்தமன், செய்யாறு மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பிரபாகரன், மலர், சாதிக் மற்றும் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
- மகளிர் சுய உதவி குழுவினர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
புதுச்சேரி:
கண்டமங்கலத்தில் வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரிய தர்ஷினி முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சம்பந்தம் சிவக்குமார் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்த்தி, முன்னிலை வகித்தனர்.
வட்டார இயக்க மேலாளர் கணேசன் வர வேற்றார். ஒன்றிய துணை சேர்மன் நஜீரா பேகம் , ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வை யிட்டார்.
கண்காட்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம், துணை சேர்மன் நஜீரா பேகம், வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து சிறந்த குழுக்களை தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாஜலம் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அலமேலு, ராதிகா, கவுசல்யா, சவுமியா, ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கவிதா நன்றி கூறினார்.






