என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் குண்டுவெடிப்பு"

    • குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
    • பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.

    குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.

    தகவல் அறிந்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

    குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர்.

    பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 

    • பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், சாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த, நவாப் அக்பர் புக்டி ஸ்டேடியத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் விளையாடவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கண்காட்சி போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது. குவெட்டா மைதானமும் சூப்பர் லீக் அந்தஸ்தைப் பெற வேண்டும் என பலுசிஸ்தான் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    குண்டுவெடிப்பு நடந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போட்டி நிறுத்தப்பட்டு, வீரர்கள் சிறிது நேரம் அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும் போட்டி மீண்டும் தொடங்கியது

    பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், கடந்த பல ஆண்டுகளாக பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×