search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டுவெடிப்பு... போட்டி சிறிது நேரம் நிறுத்தம்
    X

    பாகிஸ்தானில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டுவெடிப்பு... போட்டி சிறிது நேரம் நிறுத்தம்

    • பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், சாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த, நவாப் அக்பர் புக்டி ஸ்டேடியத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் விளையாடவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கண்காட்சி போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது. குவெட்டா மைதானமும் சூப்பர் லீக் அந்தஸ்தைப் பெற வேண்டும் என பலுசிஸ்தான் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    குண்டுவெடிப்பு நடந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போட்டி நிறுத்தப்பட்டு, வீரர்கள் சிறிது நேரம் அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும் போட்டி மீண்டும் தொடங்கியது

    பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், கடந்த பல ஆண்டுகளாக பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×