என் மலர்
நீங்கள் தேடியது "Suicide by poisoning விஷம் குடித்து தற்கொலை"
- தனசீலன் (வயது 32). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு சென்று வந்தார்.
- திருமணம் ஆகாத இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தும் பெண் கிடைக்கவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லியம்பாளை யம்புதூரைச் சேர்ந்தவர் செங்கோடு. இவரது மகன் தனசீலன் (வயது 32). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு சென்று வந்தார். திருமணம் ஆகாத இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தும் பெண் கிடைக்கவில்லை. மேலும் சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனை கட்டமுடியாமல் கவலையில் இருந்து வந்துள்ளார்.
திருமணம் ஆகாததாலும், கடனை கட்ட முடியாததாலும் விரக்தியில் இருந்த தனசீலன், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தனசீலன் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை உடனடியாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
- மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதன் காரணமாக மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து, உடல்நிலை பாதிக்கப்–பட்டார். இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து விட்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் கலைவாணியை அவரது உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கலைவாணி உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலைவாணி–யின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயக்குமார் (வயது 30). இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
- நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 30). இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் கடந்த 3 மாதங்களாக மது குடித்து விட்டு ஜவுளி வியாபா ரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மனைவி புவனேஸ்வரி இதனை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக ஜெயக்குமார் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள், அவரைக் காப்பாற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






