என் மலர்
நீங்கள் தேடியது "நிர்வாக அலுவலர்"
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.
மலேசியா தொழில் அதிபர் சீனிவாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளி வளாகத்தில் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர்கள் கவிதா, அனில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிரிட்டோ நன்றி கூறினார்.
நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.இவரது மகன் கார்த்திக். இவருடைய மகள் பிரியதர்ஷினி (18) மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 17-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்திக் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதில் தொரப்பாடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான தமிழரசன்(25) பிரியதர்ஷினியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






