என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் நிகழ்ச்சி
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.
மலேசியா தொழில் அதிபர் சீனிவாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளி வளாகத்தில் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர்கள் கவிதா, அனில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிரிட்டோ நன்றி கூறினார்.
நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story






