என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர் சாவு"

    • எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பெரியகொட்டாகுளம் அடுத்துள்ள வைரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது28). லாரி டிரைவரான இவர் ஏர்ரம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் லாரியை ஓட்டி வந்தார்.

    நேற்று ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அங்கு ரஞ்சித்குமார் லாரியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக சரவணன் கீழே தவறி விழுந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ராணா நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 76). இவரது மகன் சரவணன் என்ற சரவணகுமார் (47). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கௌரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதையடுத்து சரவணன் குடும்பத்தை விட்டு பிரிந்து உறவினர்கள் யாரிடமும் பேசாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் படித்துறையில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக சரவணன் கீழே தவறி விழுந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்தவ ர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சர வணன் என்ற சரவணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை சண்முகம் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    ×