என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பாக பணியாற்றிய"
- ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 187 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குற்ற தடுப்பு, துப்பு துலக்குதல், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்தல், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டும் நடவடி க்கையில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 184 பேர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கு என மொத்தம் 187 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
- இதில் மொத்தம் 74 பேருக்கு வழங்கப்பட்டது.
ஈரோடு:
தமிழக காவல் துறையில் எவ்வித புகார், தண்டனையின்றி சிறப்பாக பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில் மொத்தம் 74 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 7 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக தலா ரூ.25 ஆயிரமும், 3 பேருக்கு ஈமச்சடங்கு தொகையாக தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.






