என் மலர்
நீங்கள் தேடியது "எரிபொருள் மையம்"
- முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.
- முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன.
இந்தியாவின் வாகன எரிபொருள் விற்பனை நிலையங்களின் (Petrol Pumps) எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,00,266 எரிபொருள் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், உலகிலேயே அதிக பெட்ரோல் பங்குகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.
2015-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 50,451 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் கிராமப்புறங்களுக்கு எரிபொருள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த பங்குகளில் கிராமப்புறங்களின் பங்கு 22% ஆக இருந்தது. தற்போது அது 29% ஆக உயர்ந்துள்ளது.
இந்திய எரிபொருள் சந்தையில் அரசு நிறுவனங்களே பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துகின்றன. 90% மேற்பட்ட பங்குகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.
தனியார் நிறுவனங்களான நாயாரா எனர்ஜி, ரிலையன்ஸ்-பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள பங்குகளைக் கொண்டுள்ளன.
தற்போதைய பெட்ரோல் பங்குகள் வெறும் பெட்ரோல், டீசல் விற்பனையுடன் நில்லாமல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளையும் கொண்ட 'எரிசக்தி மையங்களாக' மாறி வருகின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு நிலையங்களில் மாற்று எரிபொருள் வசதிகள் உள்ளன.
- கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
- மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேல்மலை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வட்டாட்சியர் முத்துராமன்,வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள்,வனத்துறை ஊழியர்கள்,மருத்துவத்துறையினர்,வருவாய்த் துறையினர், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் மேல்மலைகிராமங்களுக்கு செல்லும் தார் சாலைகள் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விவசாய பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வது மிகவும் கடினமானதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்றனர்.
மேல்மலை கிராமப் பகுதியில் விவசாயப் பொருள்களை எடுத்து கொண்டு செல்லும்போது எரிபொருள் நிரப்புவதற்கு கொடைக்கானலுக்கு வர வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. விவசாய மோட்டார்களுக்கும், விவசாய வேலைகளுக்காக டிராக்டர் போன்றவைகளை பயன்படுத்தவும்,விவசாயப் பொருள்களை ஓட்டி செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதிலும் கடும் சிரமம் உள்ளது என்றனர்.
மேலும் மேல்மலைப் பகுதியில் இருந்து வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வரும்போது அப்சர்வேட்டரி பகுதியிலிருந்து மூஞ்சிக்கல் சந்திப்பு வரை சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருவதாகவும் இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
உடனே நகராட்சி பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என்று கோட்டாட்சியர் அறிவுறுத்தினார்.






