என் மலர்
நீங்கள் தேடியது "குடியாத்தம் நகராட்சி"
- தி.மு.க. அரசை கண்டித்தும், புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும், நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும் வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 27-ந்தேதி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரமணி தலைமையிலும், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த. வேலழகன், குடியாத்தம் நகர செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.55 லட்சம் ஒதுக்கீடு
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்றத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.
நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரப் பகுதியில் சபா கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமித்து, குழு செயலாளர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இந்த குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 144 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை இந்த மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் செம்மையாக நடைபெற நகர் பகுதிகளில் சபா கூட்டங்கள் நடைபெற உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கிராமங்களைப் போன்று நகர்களிலும் சபா கூட்டம் நடத்த உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நகர்மன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்களுடன் இணைந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக நகர மன்ற தலைவர், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்து அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த குடியாத்தம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சபை கூட்டங்கள் நடத்த வார்டுகளில் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாளமாக ஒரு உறுப்பினருக்கு நியமனச் சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆகியோர் வழங்கினர்.






