என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவியை கடத்திய வாலிபர் கைது"

    • அந்த மாணவியும், ராஜ்குமாரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள கரடியூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 28-ந்தேதி அன்று மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் ெவகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் தாய் எனது மகளை பர்கூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது22) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த மாணவியும், ராஜ்குமாரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் நேற்று ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
    • கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், இவரது மகன் சிபி (வயது19).

    இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் மாணவியை சிபி கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

    புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ரா மன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபி என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் மாணவியை கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கவிதா சிபியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×