என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது
- அந்த மாணவியும், ராஜ்குமாரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள கரடியூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி அன்று மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் ெவகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் எனது மகளை பர்கூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது22) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவியும், ராஜ்குமாரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் நேற்று ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






