என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
- கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
- கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், இவரது மகன் சிபி (வயது19).
இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் மாணவியை சிபி கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ரா மன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபி என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் மாணவியை கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கவிதா சிபியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






