என் மலர்
நீங்கள் தேடியது "புயல் எச்சரிக்கை"
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.
- 26, 27-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவலால் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு இழந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நாளை வந்தடைகிறது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழையும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் 25-ந்தேதி லேசான மழைக்கும், 26, 27-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் .
கடலூர்:
தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு சுமார் 20 கி.மீ. தூரததில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.






