என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide by hanging தூக்கு போட்டு தற்கொலை"

    • காமராஜ்(வயது 40). இவரது மனைவி ஜோதி(37). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
    • கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகரறு உண்டானது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஐயன்திருமாளிகை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்(வயது 40). இவரது மனைவி ஜோதி(37). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    காமராஜ் அலுமினியம் பிட்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகரறு உண்டானது.

    இதில் மனம் உடைந்த ஜோதி சேலம் டவுன் முள்ளுவாடி கேட் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். தாய் வீட்டில் இருந்த ஜோதி இன்று காலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராமதாஸ் கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு, மேற்கு தெருவை சேர்ந்த வர் ராமதாஸ் (34), கூலித் தொழிலாளி.இவரது மனைவி அனுசுயா (34).

    ராமதாஸ் கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இந்த நிலையில் ராமதாஸ் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள விட்டத்தில் துணியால் தூக்கு போட்டு உயிருக்கு போராடினார்.இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ராமதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை சவக்கி டங்கில் வைத்து சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் பூசாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மகள் கவுசிகா (வயது 14). இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.

    அவரது வீட்டினர் திடீரென்று வீட்டைத் திறந்து பார்த்தபோது துடிதுடித்த நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் இந்த பள்ளியில் பிரச்சினையா? அல்லது வீட்டில் குடும்பப் பிரச்சினையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×