என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் தாய் வீட்டிற்கு வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை
- காமராஜ்(வயது 40). இவரது மனைவி ஜோதி(37). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
- கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகரறு உண்டானது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஐயன்திருமாளிகை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்(வயது 40). இவரது மனைவி ஜோதி(37). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
காமராஜ் அலுமினியம் பிட்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகரறு உண்டானது.
இதில் மனம் உடைந்த ஜோதி சேலம் டவுன் முள்ளுவாடி கேட் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். தாய் வீட்டில் இருந்த ஜோதி இன்று காலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






