என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு"

    • நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த காரணமாக இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.34 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும், அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த காரணமாக இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,556 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
    • இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    கூடலூர்:

    கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 70 அடியில் நீடித்து வந்த வைகை அணை நீர்மட்டம் சரிந்து 69.67 அடியாக உள்ளது.

    அணைக்கு 934 கனஅடிநீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மேற்குதொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1508 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 10 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.78 அடியாக உள்ளது. 29 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 24.6, தேக்கடி 15, உத்தமபாளையம் 1.4, வீரபாண்டி 3.4, வைகை அணை 1.8, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 4, ஆண்டிபட்டி 2, போடி 15.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×