search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continued rains"

    • கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
    • இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    கூடலூர்:

    கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 70 அடியில் நீடித்து வந்த வைகை அணை நீர்மட்டம் சரிந்து 69.67 அடியாக உள்ளது.

    அணைக்கு 934 கனஅடிநீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மேற்குதொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1508 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 10 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.78 அடியாக உள்ளது. 29 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 24.6, தேக்கடி 15, உத்தமபாளையம் 1.4, வீரபாண்டி 3.4, வைகை அணை 1.8, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 4, ஆண்டிபட்டி 2, போடி 15.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வந்த போதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பெரியகுளம் சோத்துப்பாறை அணை, கல்லாறு, கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில சாரல் மழை பெய்தது. மேலும் தேவதானப்பட்டி மஞ்சளாறு, வடபுதுப்பட்டி, வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உள்ளது. நேற்று 643 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில் இன்று காலையில் 1081 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 933 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6105 மி.கனஅடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70.05 அடியாக உள்ளது. வரத்து 832 கனஅடி, திறப்பு 769 கனஅடி, இருப்பு 5838 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 124.80 அடி, திறப்பு 3 கனஅடி

    பெரியாறு 21.4, தேக்கடி 21.6, கூடலூர், 3.8, உத்தமபாளையம் 1.6, மஞ்சளாறு 10.2, சோத்துப்பாறை 10, போடி 5.8, பெரியகுளம் 3.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் சீரமைப்பை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாண்டிக்குடி-வத்தலக்குண்டு ரோட்டில் பட்டலங்காடு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது பட்டலங்காடு பிரிவு வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. மீதம் உள்ள 4 கி.மீ. தூரத்திற்கு மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடைகளை வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் தொடர் மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வில்லை.

    30 ஆயிரம் மணல் மூடைகளை வைத்து அடுக்கினால் மட்டுமே இப்பணி நிறைவடையும். தற்போது வரை 10 ஆயிரம்மணல் மூடைகள் மட்டுமே அடுக்கப்ப ட்டுள்ளது. இருந்தபோதும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இேதபோல் கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் நேற்று 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். மழை நின்ற பிறகுதான் பணிகள் ெதாடங்கும் என்பதால் அதுவரை இந்த சாலையில் எந்தவித வாகன போக்குவரத்தும் மேற்கொள்ளகூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் மழை சற்று குறைந்து இருந்தபோதிலும் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் சீரமைப்பை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    ×