என் மலர்
நீங்கள் தேடியது "லாரி மீது அரசு பஸ் மோதல்"
- லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதி நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
- விபத்தில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடமதுரை:
பழனியில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. இதில் 55 பயணிகள் இருந்த னர். பஸ்சை கருங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் ஓட்டிவந்தார். கண்டக்டராக நல்லுசாமி பணியில் இருந்தா ர். இேத போல் ஒட்டன்சத்தி ரத்தில் இருந்து திருச்சிக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் லாரி பழுதடைந்ததால் அதனை ஓரமாக நிறுத்த டிரைவர் மெதுவாக ஓட்டிச்சென்றார்.
நள்ளிரவு சமயம் என்பதால் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவருக்கு லாரி மெதுவாக செல்வது தெரியவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
பஸ்சில் வந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து அலறினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு போலீசார் மற்றும் சுங்கச்சாவடி படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் பயணம் செய்த மணப்பாறையை சேர்ந்த நல்லுச்சாமி(49), வள்ளி(52), கருங்குளம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணராஜ்(50), உடுமலைப்பேட்டை தேவ ராஜ்(55), காட்டுமன்னார்குடி ரோஜாவள்ளி, சென்னை யை சேர்ந்த சிவக்குமார், திருச்சியை சேர்ந்த பிரபா கரன், லட்சுமி, பஸ் டிரைவர் கிருஷ்ணராஜ்(55) உள்பட 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் மண ப்பாறை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- கட்டுபாட்டை இழந்து மோதியது
சேத்துப்பட்டு:
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து மேல் மலையனூருக்கு 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (42) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் சாலையோரம் பழுதாகி சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் திருநாவுக்கரசு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயமின்றி உயிர் தப்பினர்.






