என் மலர்
நீங்கள் தேடியது "Govt bus collides with lorry"
- போலீசார் விசாரணை
- கட்டுபாட்டை இழந்து மோதியது
சேத்துப்பட்டு:
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து மேல் மலையனூருக்கு 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (42) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் சாலையோரம் பழுதாகி சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் திருநாவுக்கரசு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயமின்றி உயிர் தப்பினர்.






