என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் சிறப்பு பூஜை"

    • தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    நெமிலி:

    நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று வைகாசிமாத தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சென்னை, பெங்களூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நல்லம்பள்ளி அருகே உள்ள முத்தம்பட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு துளசி மாலையும், எலுமிச்சம்பழ மாலை மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் தருமபுரி சுற்று வட்டார பகுதியான நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, இண்டூர், தொப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இங்கு சனிக்கிழமை தோறும் சுற்றுவட்டார கிராமமான பொனல் நத்தம், காளிங்காவரம், வேப்பனப் பள்ளி, வேம்பள்ளி, பேரிகை, அத்திமுகம் பகுதியில் இருந்து வந்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பஸ்தலபள்ளி ஊராட்சியில் 100 ஆண்டு பழைமையானஸ்ரீ திம்மராய சுவாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு சனிக்கிழமை தோறும் சுற்றுவட்டார கிராமமான பொனல் நத்தம், காளிங்காவரம், வேப்பனப் பள்ளி, வேம்பள்ளி, பேரிகை, அத்திமுகம், பிஸ்திம்மசந்திரம், நெரிகம், சின்னார், மேலுமலை, சூளகிரி உள்பட பல பகுதியில் இருந்து வந்தனர்.

    நேற்று கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் சுவாமி தரிசனம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

    • செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு செல்வ காளியம்மனுக்கும் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தன பள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் அனுமந்தராய சுவாமி, செல்வ காளியம்மன் கோவில்கள் உள்ளது.

    ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு செல்வ காளியம்மனுக்கும் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    ×