என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.20 ஆயிரம் லஞ்சம்"

    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
    • லஞ்சமாக ரூ.20 ஆயிரம் பெற்றதாக கூறப்ப டுகிறது. இந்த தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மேனகாவும், சிறப்பு எஸ்.ஐ.யாக சுமதி, ஏட்டாக அம்சவள்ளி உள்பட பலர் பணியாற்றி வந்தனர்.

    காதல் ஜோடி

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. போலீஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய 3 பேரும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

    இதற்கு லஞ்சமாக ரூ.20 ஆயிரம் பெற்றதாக கூறப்ப டுகிறது. இந்த தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதமாக மாறியது. இதனால் போலீஸ் நிலையத்திலேயே காரசாரமாக மோதி கொண்டனர். இந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றது.இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது காதல் ஜோடியை சேர்த்து வைக்க பணம் பெற்றதும், பங்கு போடுவதில் தகராறு செய்ததும் உறுதியானது.

    ஆயுதப்படைக்கு மாற்றம்

    இதையடுத்து 3 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறை ரீதியதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 பேர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சி அத்திமூர் கிராமத்தில் வசிப்பவர் ஒப்பந்ததாரர் ராஜாராம். இவர், திண்டிவனம் ஊராட்சியில் ரூ.2 லட்சத்தில் கால்வாய் அமைத்துள்ளார். இப்பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில், கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெற்ற தற்கான சான்று கொடுக்க 10 சதவீதம் கமிஷன் என்ற அடிப்படை யில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

    இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ராஜாராம் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின்பேரில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில்இருந்த பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமனிடம் ரசாயனம் தடவிய லஞ்சப் பணம் ரூ.20 ஆயிரத்தை ராஜாராம் நேற்று கொடுக்க முயன்றுள்ளார்.

    லஞ்சப் பணத்தை, தற்காலிக பணியாளர் ராஜ்குமார் மூலம் புருஷோத்தமன் பெற்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்தலஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான போலீசார் புருஷோத் தமன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    அைத தொடர்ந்து கைதான 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×