என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மர்ம சாவு"

    • லட்சுமண ராஜ் (வயது 56). இவரது மனைவி ரேணுகாதேவி (53). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
    • தற்சமயம் லட்சுமண ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி அடுத்த மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராஜ் (வயது 56). இவரது மனைவி ரேணுகாதேவி (53). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    தற்சமயம் லட்சுமண ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் லட்சுமண ராஜ் நேற்று முன்தினம் காலை ரேணுகாதேவியிடம் போன் செய்து பேசி உள்ளார். அப்போது தனக்கு உடல் நலக்குறைவாக உள்ளதாக ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.

    கதவு திறக்கவில்லை

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிற்கு பால் போட வந்த நபர் கதவை தட்டியும் ரேணுகாதேவி கதவை திறக்காததால் அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து சென்று விட்டார்.

    இன்று காலையும் பால்காரர் கதவை தட்டிய போது ரேணுகாதேவி கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பால்காரர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.

    மர்ம சாவு

    இது குறித்து தகவல் அறிந்ததும் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரேணுகாதேவி சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரேணுகா தேவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரேணுகா தேவியின் கணவர் லட்சுமணராஜிக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.

    பரபரப்பு

    பூட்டிய வீட்டில் பெண் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சங்கராபுரம் அருகே இளம் பெண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் சகோதரி பொன்னம்மாள், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மனைவி மலர்(வயது35) மாற்றுத்திறனாளி. கணவரால் கைவிடப்பட்டவர்.

    இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்த அவர், மணலூர்பேட்டையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ் இல்லாததால் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு முழுவதும் காத்திருந்தார். அப்போது திடீரென அதிகாலையில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரை, உறவினர்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதனிடைய அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் சகோதரி பொன்னம்மாள், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் மலரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் வைத்து மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே இடத்தில் மலரின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் பாபு, மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். மலர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே தெரியும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×