என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் தோண்டி எடுப்பு"

    • மீண்டும் அதே இடத்தில் அடக்கம்
    • மனைவி இறப்பு சான்றிதழ் கேட்டதால் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி (44) முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

    ரஜினி இதனையடுத்து, அவரது உறவினர்கள் (கோப்புப்படம்). ரஜினியின் உடலை புள்ளாநேரி அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த ரஜினியின் மாதாந்திர ஓய்வூதியம் பணம் தனக்கு சேர வேண்டும் என அவரது மனைவி ஜெயஸ்ரீ, ராணுவ அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    ஆனால், ராணுவ அலுவலகத்தில் ரஜினி உயிரிழந்ததற்கான பிரேதப் பரிசோதனை சான்றிதழ் அளிக்கப்பட்டால் தான் அதற்கான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட தனது கணவர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்க வேண்டும் என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயஸ்ரீ கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மனு அளித்தார்.

    அதனடிப்படையில், நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி முன்னிலையில் மருத்துவக் குழுவினர் புள்ளாநேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ரஜினியின் உடலை நேற்று தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து, மீண்டும் அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே இளம் பெண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் சகோதரி பொன்னம்மாள், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மனைவி மலர்(வயது35) மாற்றுத்திறனாளி. கணவரால் கைவிடப்பட்டவர்.

    இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்த அவர், மணலூர்பேட்டையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ் இல்லாததால் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு முழுவதும் காத்திருந்தார். அப்போது திடீரென அதிகாலையில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரை, உறவினர்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதனிடைய அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் சகோதரி பொன்னம்மாள், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் மலரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் வைத்து மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே இடத்தில் மலரின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் பாபு, மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். மலர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே தெரியும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×