என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பாலை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம சாவு
    X

    இரும்பாலை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம சாவு

    • லட்சுமண ராஜ் (வயது 56). இவரது மனைவி ரேணுகாதேவி (53). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
    • தற்சமயம் லட்சுமண ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி அடுத்த மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராஜ் (வயது 56). இவரது மனைவி ரேணுகாதேவி (53). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    தற்சமயம் லட்சுமண ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் லட்சுமண ராஜ் நேற்று முன்தினம் காலை ரேணுகாதேவியிடம் போன் செய்து பேசி உள்ளார். அப்போது தனக்கு உடல் நலக்குறைவாக உள்ளதாக ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.

    கதவு திறக்கவில்லை

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிற்கு பால் போட வந்த நபர் கதவை தட்டியும் ரேணுகாதேவி கதவை திறக்காததால் அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து சென்று விட்டார்.

    இன்று காலையும் பால்காரர் கதவை தட்டிய போது ரேணுகாதேவி கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பால்காரர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.

    மர்ம சாவு

    இது குறித்து தகவல் அறிந்ததும் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரேணுகாதேவி சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரேணுகா தேவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரேணுகா தேவியின் கணவர் லட்சுமணராஜிக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.

    பரபரப்பு

    பூட்டிய வீட்டில் பெண் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×