என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் மீனவர்கள் கைது"
- படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
- ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு படகில் பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பதை கண்டனர். இதையடுத்து படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதானவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நல்லாவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பாகிஸ்தான் அத்துமீறி நுழைவதும், இந்திய பாதுகாப்பு படைகளை பார்த்ததும் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கட்ச் கடற்பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் சிலர் 9 படகுகளில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அங்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வருவதை பார்த்ததும் 3 படகுகளை விட்டுவிட்டு பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் தப்பி சென்றனர்.
அவர்களை தேடும் பணியில் இந்திய படையினர் ஈடுபட்டனர். இதில் 2 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்கள் பாகிஸ்தானின் ஜீரோ பாயிண்ட் கிராமத்தை சேர்ந்த சதா ஹூசன், அலி பக்ஷா என்பது தெரிய வந்தது.
பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்ய துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகி விட்டதாகவும், இரண்டு பேருக்கும் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நல்லாவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதிக்குள் பாகிஸ்தான் அத்துமீறி நுழைவதும், இந்திய பாதுகாப்பு படைகளை பார்த்ததும் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.






