என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலை ஏற்க மறுப்பு"

    • காதலை ஏற்க பெற்றோர்கள் மறுப்பு
    • திருமண ஏற்பாடு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு முடித்தார்.

    கடந்த 2 வருடமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர் தனது பெற்றோரிடம் தான் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்து விட்டனர்.

    அதன் பிறகு பெற்றோர்கள் தனது மகளுக்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதனால் திருப்பூரில் இருந்த தனது மகளை கடந்த 6-ந் தேதி வீட்டிற்கு வரவழைத்தனர்.

    வீட்டிற்கு வந்த மைனர் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்வது குறித்து தகவல் தெரிந்தது. இதனால் கடந்த 8-ந் தேதி இரவு 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மைனர் பெண் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.

    ஆனால் எங்கும் கிடைக்காததால் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து வாலிபர் வெறிச்செயல்
    • காதலை ஏற்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். காஞ்சி அடுத்த மேல்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் (வயது 25) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மாணவியிடம் தன் காதலை ஏற்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு நேரடியாக சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலை எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளுமாறு அந்த மாணவியிடம் தமிழ்வாணன் வலியுறுத்தியுள்ளார்.

    மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் மாணவியை கன்னத்தில் அறைந்துவிட்டு கழுத்து நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தபோது வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது சம்பந்தமாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×