என் மலர்
நீங்கள் தேடியது "கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்"
மத்திய அரசு புதிதாக அறிவித்திருக்கும் கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் நிறுவன தலைவர் பி.சகிலன் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் தணிகைவேலு, பொதுச் செயலாளர் வீரமுத்து, பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.கே.ரங்கராஜன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பி.சகிலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரும்பிய கேபிள் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய நடைமுறையை மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த உள்ளது. தற்போது 200-க்கும் அதிகமான இலவச சேனல்கள், 80-க்கும் மேற்பட்ட கட்டண சேனல்களுக்கு மாதம் ரூ.160-ம், 300-க்கும் மேற்பட்ட முக்கிய சேனல்களுக்கு ரூ.200-ம், எச்.டி. தர சேனல்களுக்கு ரூ.300-ம் என வாடிக்கையாளர்கள் கேபிள் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய நடைமுறையால், இனி கேபிள் பயன்பாட்டை உபயோகிக்க மாதம் ரூ.600 முதல் ரூ.800 வரை செலவாகும். ‘செட்-ஆப்’ பாக்ஸ் பயன்பாட்டாளர்கள் இனி மாதம் ரூ.1,000 வரை கட்டணம் செலுத்த நேரிடும்.
அதேபோல கேபிள் டிவி இணைப்புக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். எனவே மக்களுக்காகவும், கேபிள் டி.வி. தொழிலை நம்பியுள்ள 24 ஆயிரம் ஆபரேட்டர்கள் உள்பட 3.5 லட்சம் தொழிலாளர்களுக்காகவும் இந்த புதிய கட்டண முறையை ரத்து செய்யவேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்திலேயே கேபிள் டி.வி. நடத்திட அனுமதித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி:
தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் கேபிள் டி.வி. கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் இன்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நலச்சங்க மாநில துணை தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை பகுதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், மணப்பாறை மற்றும் துறையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ள பொதுமக்களே டி.வி. சேனலை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் கட்டண உயர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், சிறந்த பொழுது போக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையாக விளங்கும் கேபிள் டி.வி.க்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீத மாக குறைக்க வேண்டும், தமிழக அரசு கட்டண சானல்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் தொழிலை புனரமைக்க தலா ரூ.ஒரு லட்சம் இழப்பீடு, முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் தலா ரூ.2லட்சம் கடன் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






