என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் விசரணை"
மேட்டுப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை (51). ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் 23 பேருடன் வேனில் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர்.
வேனை சித்தப்பட்டினத்தை சேர்ந்த வெங்கேடஷ் (45) ஓட்டி வந்தார். வேன் நேற்று இரவு 8.30 மணியளவில் ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு பகுதியில் வந்து கொண்டிருந்தது.
திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த பாறை மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்கள் இடி பாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். வேனில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு-
ஏழுமலை (51), அவரது மகன் ராகவன் (10), சந்தோஷ் (18), பூஜா (16), கே.ஏழுமலை (35), நவீத் (17), ஜனனி (5),ஜெயா (25), நமிஷா பேகம் (27), பாரதி (27),மாதவன் (10), நிவாஷ் (4),சந்திர சேகர் (31),அருண் குமார் (30), சத்யா (29), பூர்ணேஷ் (12), முருகன் (49), பரதன் (41).விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்த 18 பேரையும் 108 மற்றும் தனியார் ஆம்புலன்சில் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பலத்த காயம் அடைந்த ஜனனி, அருண் குமார், முருகன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்ணச்சநல்லூர்,
மே 23-
கொள்ளிடம் ஆற்றில் அடை யாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.மண்ணச்சநல்லூர் வட்டம் மான்பிடிமங்கலம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரி அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று கிடந்தது. ஐந்தரை அடி உயரத்தில் மாநிறமான அந்த நபர் கருப்பு, சிவப்பு கட்டம் போட்ட சாரம் (லுங்கி) மட்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.இது குறித்து மாதவ பெருமாள் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யாரென்றும், அவர் எதனால் இறந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார். போ லீசார் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






