என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு"

    • SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
    • சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்

    ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்று சீனா அதிகாரபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்ட கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை நடத்தும். SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக சீனா, பிரதமர் மோடியை வரவேற்கிறது.

    அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சங்கமமாக இருக்கும்.

    SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தை சீனா விமர்சித்தது. "நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்" என இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong தெரிவித்திருந்தார். 

    சீனாவில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். #SCOSummit #PMModi #ChinaVisit

    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் குயிங்டாவோ நகரில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    அதற்காக பிரதமர் மோடி நாளை இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த பிராந்திய மற்றும் உலகளாவிய நடவடிக்கை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியா, கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினர் ஆனது.



     நாளை சீனா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில் சீனாவின் ஊஹன் நகருக்கு சென்ற மோடி சீன அதிபருடன் பேச்சிவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய சந்திப்பின் போது, முந்தைய சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது மற்ற நாட்டு தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. #SCOSummit #PMModi #ChinaVisit
    ×