என் மலர்
நீங்கள் தேடியது "விஜய் மல்லையா."
- கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுள்ளனர்.
- கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பெங்களூரு:
தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அவர் பெற்ற கடனுக்கு ஈடாக அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை ஏலத்தில் விற்றது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்று ரூ.14 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜய் மல்லையா சார்பில் அவரது வக்கீல் சஜன் பூவையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "வங்கிகளில் நான் பெற்ற கடனை வசூலிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, ரூ.6,200 கோடியை செலுத்த வேண்டும் என கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை செலுத்தாததால், அமலாக்கத் துறை அந்த நிறுவன சொத்துகளை விற்று கடனை திருப்பிச் செலுத்தி உள்ளது.
ஆனால், ரூ.6,200 கோடி கடனுக்கு சொத்துகளை விற்று ரூ.14 ஆயிரம் கோடி மீட்டுள்ளதாக நிதி மந்திரி கூறி உள்ளார். அதேநேரம், ரூ.10,200 கோடி மீட்கப்பட்டு வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடன் வசூல் அதிகாரி கூறியுள்ளார்.
எனவே, நான் பெற்ற கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டுள்ளதால் அந்த கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று நீதிபதி ஆர்.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தேவதாஸ், விஜய் மல்லை யாவின் இந்த மனு குறித்து வருகிற 13-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கில் வாதங்களை எடுத்துவைப்பதற்கான இறுதி நாளாக வருகிற 31-ந் தேதியை கோர்ட்டு நிர்ணயித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து அப்பீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து செப்டம்பர் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்துக்கு வந்த மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் இங்கிலாந்து வாழ் இந்தியர்தான். இந்தியாவில் வசிப்பது இல்லை. அப்படியிருக்க நான் தப்பி ஓடியதாக எப்படி கூற முடியும்? எங்கு நான் திரும்பி போக வேண்டும்? இவை எல்லாம் வெறும் அரசியல்தான்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், என்னை திரும்ப அழைத்து வந்து, புனித சிலுவையில் தொங்கவிட்டு அதன்மூலம் வாக்குகளை பெறலாம் என அவர்கள் (மத்திய அரசு) நம்புவதாக நினைக்கிறேன். அதற்காகவே என்னை இந்தியா கொண்டு செல்ல விரும்புகின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள எனது சொத்துகளை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். ஆனால் இங்கு எனக்கு அதிக சொத்துகள் இல்லை. எனது குடும்பத்தினர் பெயரிலேயே சொத்துகள் உள்ளன.
நான் தங்கியிருக்கும் வீடு எனது குழந்தைகளுக்கும், லண்டனில் உள்ள ஒரு வீடு எனது தாய்க்கும் சொந்தமானவை. அவற்றை யாரும் தொட முடியாது. ஒருசில கார்கள், சிறிதளவு நகைகள் மட்டுமே எனக்கு சொந்தமாக உள்ளன.
அவற்றை பறிமுதல் செய்வதற்காக நீங்கள் எனது வீட்டுக்கு வர வேண்டாம். நானே நேரடியாக அவற்றை ஒப்படைக்கலாம். அதற்கான நேரமும், இடமும் சொன்னால் போதும்.
இங்குள்ள சொத்துகள் தொடர்பாக லண்டன் கோர்ட்டில் நான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளேன். அவற்றில் கூறியுள்ளதுபோல எனது பெயரில் உள்ள சொத்துகளை எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உண்டு. அதைத் தாண்டி அவர்களால் ஒரு அடியும் முன்னே செல்ல முடியாது.
மொனாக்கோ மற்றும் அபுதாபியில் பந்தயங்களில் ஈடுபடுத்தி வந்த படகு ஒன்று, ஊழியர்களுக்கான சம்பள பிரச்சினை விவகாரத்தில் சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அது எனது பிரச்சினை இல்லை.
இவ்வாறு விஜய் மல்லையா கூறினார். #Tamilnews






