என் மலர்
நீங்கள் தேடியது "மாணவி கிண்டல்"
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட மீனவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் நாகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 23). மீனவர். இவரது தங்கை புதுவையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போதும், பள்ளியை விட்டு திரும்பும் போதும் முத்தியால் பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் சிவசங்கர் (19) ஆகியோர் கிண்டல் செய்து வந்தனர்.
இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் நவீன்குமாரிடம் இதுபற்றி முறையிட்டார். இதனை கண்காணித்து வந்த நவீன் குமார் நேற்று மாலை கிண்டல் செய்த அந்த வாலிபர்களிடம் தட்டிக் கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரும் நேற்று நவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் நவீன்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து நவீன்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் நாகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 23). மீனவர். இவரது தங்கை புதுவையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போதும், பள்ளியை விட்டு திரும்பும் போதும் முத்தியால் பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் சிவசங்கர் (19) ஆகியோர் கிண்டல் செய்து வந்தனர்.
இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் நவீன்குமாரிடம் இதுபற்றி முறையிட்டார். இதனை கண்காணித்து வந்த நவீன் குமார் நேற்று மாலை கிண்டல் செய்த அந்த வாலிபர்களிடம் தட்டிக் கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரும் நேற்று நவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் நவீன்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து நவீன்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
அரியாங்குப்பத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்:
புதுவை அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அங்கு பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகளையும், அவ்வழியே சென்ற பெண்களையும் பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றிய தகவலின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்த சத்யானந்தன் (வயது 29) மீனவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து சத்யானந்தனை கைது செய்தனர்.






