என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோக்கள் ஓடவில்லை"
- கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஓடவில்லை.
- ஓடக்கூடிய ஆட்டோக்கள் சென்னையில் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஆட்டோ டிரைவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஓடவில்லை. இன்று 2-வது நாளாக பிரச்சினை அதிகரித்தது.
எல்.பி.ஜி. கியாஸ் மூலம் ஓடக்கூடிய 30 ஆயிரம் ஆட்டோக்கள் சென்னையில் உள்ளன. இந்த ஆட்டோக்கள் ஓட்ட முடியாமல் முடங்கியுள்ளன. கியாஸ் நிரப்பக்கூடிய பங்குகளில் கியாஸ் இல்லாததால் வேறு வழியில்லாமல் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். எல்.பி.ஜி. கியாஸ் ஓடக்கூடிய ஆட்டோக்கள் சென்னையில் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்க தலைவரும் டிரைவருமான பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னையில் எல்.பி.ஜி. கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் கணிசமாக உள்ளன. ஆனால் போதுமான கியாஸ் நிரப்பும் பங்குகள் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள கியாஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல பங்குகள் கியாஸ் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து கியாஸ் நிரப்ப வேண்டிய நிலை உள்ளது.
கியாஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோக்கள் முழுமையாக ஓட்ட முடியவில்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மோட்டார் தொழிலில் தொடர்புடைய அனைத்து சங்க கூட்டமைப்புகளும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. தொ.மு.ச. அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம், ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தனர்.
குமரி மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேன்கள், 4 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது. இதில் பெரும்பாலான வேன்கள், ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.
ஆட்டோக்கள் ஓடாததால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுபோல இன்று காலை ரெயில், பஸ்களில் வந்து இறங்கியவர்களும் வீடுகளுக்கு செல்ல ஆட்டோ கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள், வாடகை வேன்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான வேன்கள் இன்று கேரளா செல்லவில்லை. இதுபோல கேரளா செல்லும் அரசு பஸ்களும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள், அலுவலக ஊழியர்கள் அவதிப்பட்டனர்.
இன்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து மோட்டார் தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர். இவர்களுடன் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப்புகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டன.
குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான ஒர்க்ஷாப்புக்கள் மூடிக்கிடந்தது. உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்படவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill






