என் மலர்
நீங்கள் தேடியது "சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்"
மாருதி சுசுகியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அதிக ஏர்பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #maruti #Ciaz
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய சியாஸ் மாடலில் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் வெர்னா மற்றும் ஹோன்டா சிட்டி டாப்-என்ட் வேரியன்ட்களில் ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்படும் நிலையில், டொயோட்டா யாரிஸ் மாடலில் மட்டுமே ஏழு ஏர்பேக்ஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய சியாஸ் அதிக பாதுகாப்பு வசதி கொண்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது மாருதி நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு கொண்ட மாடலாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாருதி சியாஸ் கார் ஆகஸ்டு 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் ஏற்கனவே விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாருதி சுசுகியின் நெக்சா விற்பனையாளர்கள் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலின் முன்பதிவுகளை துவங்கியுள்ளன.
சமீபத்தில் புதிய சியாஸ் மாடலின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டது. புதிய டீசர் படங்களில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதிய எல்.இ.டி. லைட் தற்சமயம் சந்தைக்கு ஏற்ற வகையில் அழகாக காட்சியளிக்கிறது.
வடிவமைப்பை பொருத்த வரை சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மேம்படுத்தப்பட்ட கிரில், மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #maruti #Ciaz
ஹூன்டாய் வெர்னா மற்றும் ஹோன்டா சிட்டி டாப்-என்ட் வேரியன்ட்களில் ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்படும் நிலையில், டொயோட்டா யாரிஸ் மாடலில் மட்டுமே ஏழு ஏர்பேக்ஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய சியாஸ் அதிக பாதுகாப்பு வசதி கொண்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது மாருதி நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு கொண்ட மாடலாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாருதி சியாஸ் கார் ஆகஸ்டு 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் ஏற்கனவே விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாருதி சுசுகியின் நெக்சா விற்பனையாளர்கள் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலின் முன்பதிவுகளை துவங்கியுள்ளன.
சமீபத்தில் புதிய சியாஸ் மாடலின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டது. புதிய டீசர் படங்களில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதிய எல்.இ.டி. லைட் தற்சமயம் சந்தைக்கு ஏற்ற வகையில் அழகாக காட்சியளிக்கிறது.
வடிவமைப்பை பொருத்த வரை சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மேம்படுத்தப்பட்ட கிரில், மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #maruti #Ciaz
மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்குகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம். #Ciaz #Maruti
2018 மாருதி சுசுகி ஃபேஸ்லிஃப்ட் சியாஸ் மாடலின் முன்பதிவுகள் ஆகஸ்டு 10-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படுகிறது. நெக்சா விற்பனையகங்கள் அல்லது நெக்சா வலைதளம் சென்று ரூ.11,000 செலுத்தி புதிய காரினை முன்பதிவு செய்யலாம். மேம்படுத்தப்பட்ட சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கார் அறிமுகம் தாமதமாக நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்கள் தற்போதைய சியாஸ் செடான் மாடல் காரினை விற்று தீர்க்க முடியும் என கூறப்படுகிறது. அனைத்து யூனிட்களையும் விற்றுத்தீர்க்க பல்வேறு விற்பனையாளர்கள் செடான் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட சியாஸ் கார் ஹோன்டா சிட்டி, ஹூன்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியாஸ் மாடலில் புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்-லேம்ப் இன்சர்ட்கள், டேடைம் ரன்னிங் லைட்களை மாருதி புதிய காரில் வழங்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை புதிதாக வெளிப்படும் என்றும் இது தற்சமயம் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் புத்தம் புதிய எர்டிகா மாடலை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #MarutiSuzuki #Ciaz
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் காரின் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது. #Maruti
மாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் சார்ந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய செடான் மாடல் ஆகஸ்டு 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
நெக்சா விற்பனையகங்களில் புதிய சியாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன, அதன்படி பயனர்கள் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை செலுத்தி புதிய செடான் மாடலை முன்பதிவு செய்யலாம். இத்துடன் புதிய கார் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி புதிய சியாஸ் மாடல் மேக்னம் கிரே நிறத்தில் கிடைக்கும் என்றும் மெஷின் ஃபினிஷ் செய்யப்பட்ட 16-இன்ச் அலாய் வீல்கள் ஆல்ஃபா வேரியன்ட்-லும், டெல்டா மாடலில் 15-இன்ச் வீல்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய சியாஸ் மாடல்: சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், ஆட்டோ டிமமிங் IRVM வசிதகளும், ஸ்டீரிங் வீலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அனைத்து வேரியன்ட்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #Maruti #automobile






