என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிட்யா"

    டியூட் பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டியூட் படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    இவ்விழாவில் பேசிய டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூறியதாவது:-

    இன்றைய நாளில் டியூட் திரைப்படம் 95 கோடியை கடந்துள்ளது. நாளை 100 கோடியை அடைந்துவிடும். அப்படி என்றால், அத்தனை கால் தடங்கள் பதிந்துள்ளது. இது கதையை ஏற்றுக் கொண்டதற்கான அறிகுறி.

    இதற்காக, ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    டியூட் பல விவாதத்தை ஏற்படுத்தியதாக சொல்றாங்க. இது தமிழ்நாடு, இந்த மாநிலத்தில் நிறைய பெரியவர்கள் இருந்தனர். ஒரு பெரியவரும் இருந்தார். அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் வழியில்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். எனது அடுத்தடுத்த படங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரபுதேவா நடிப்பில் லக்‌ஷ்மி படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், அவர் தனது குழந்தைகளுக்கு நடனமாட தெரியாது என்று கூறியிருக்கிறார். #Prabhudeva #Lakshmi
    பிரபுதேவா நடிப்பில் லக்‌ஷ்மி படம் இன்று வெளியாகி இருக்கிறது. பிரபுதேவா கூறும்போது, “ இப்போ வர்ற இயக்குனர்கள் கிட்டயும் கதை கேட்கிறேன். பழைய ஆட்கள்கிட்டேயும் கதை கேட்கிறேன். 

    ‘ஊமை விழிகள்’ படத்துல 20 வயது பையன் இயக்குநர். புதியவர்களையும், முன்பு படம் செய்த இயக்குநர்களையும் பேலன்ஸ் செய்து படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை’ என்றார். உங்கள் வாரிசுகள் நடிக்க வருவார்களா? என்று கேட்டதற்கு, அவங்க சினிமாவுக்குத்தான் வரணும்னு என் மனதில் தோன்றியதில்லை. அவங்களுக்கு டான்ஸ் ரிகர்சல் ரூம்னா என்னென்னு கூடத் தெரியாது. 

    என்ன பிடிக்குதோ அதைச் செய்யட்டும். இப்போ நல்ல பசங்கன்னு பேர் வாங்கினா போதும். அதுவே பெரியவங்களா வளர்ந்ததும், ‘அவர் நல்ல ஆளுப்பா’ன்னு பேர் வாங்கினா போதும்’ என்று கூறி இருக்கிறார். #Prabhudeva #Lakshmi

    ×