என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் நகை பறிப்பு"

    சேலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி ஜம்பு . இவர் நேற்று லீ-பஜார் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை எடுத்துக் கொண்டு பஸ்சில் வந்து இறங்கினார். லீ பஜாரில் பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் ஜம்பு அதிர்ச்சி அடைந்தார்.

    யாரோ நைசாக நகையை திருடி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் கல்லூரி பேராசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் பழையூர் அய்யம் பெருமாம்பட்டி, ஊமையர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி ஆனந்தி (வயது34).

    இவர், சேலம் கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரியில் பணி முடிந்து மாலையில் ஆனந்தி தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பினார்.மாலை 6 மணிக்கு கருப்பூர், சாமிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து, ஆனந்தி ஓட்டிய மொபட்டை முந்திச்சென்று குறுக்கே தடுத்து நிறுத்தினார்கள்.

    அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்த வாலிபர், ஆனந்தி கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தான். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும். அதிர்ச்சி அடைந்த ஆனந்தி அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆனந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து, தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.

    பெண்களை குறி வைத்து நகை பறிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பலை போலீஸ் உயர் அதிகாரிகள் களை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் .

    ×