search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slander about t"

    • முதல்வர் குறித்து அவதூறு பேச்சு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதியப்பட்டது.
    • சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளியில் நடப்பாண்டு ஜன.22-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா நடந்தது. அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ×