search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sight"

    • ராஜபாளையத்தில் ஊரணி சுற்றுப்பாதை பணிகள் நகர்மன்ற தலைவி பார்வையிட்டார்.
    • பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி 27-வது வார்டில் கருப்பஞானியார் கோவில் அருகே வடுக ஊரணி உள்ளது. இந்த ஊரணியை சுற்றி சுற்றுப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது நகராட்சி சார்பில் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்று வட்டார பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    இதில் தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி ராமமூர்த்தி, வீரலட்சுமி, ராமலட்சுமி, குருசாமி, மாரியப்பன், . நாகேஸ்வரன், கோவில் தர்மகர்த்தா டாக்டர் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளின் உயரம், எடை குறித்து குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதை அவர் பார்வையிட்டார்.
    • முதி யோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரி ஒன்றியம், காட்டூர் பகுதியிலுள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும், அம்மையப்பன் பகுதியி லுள்ள சேவாயோகா மாணவர் மற்றும் முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும் மற்றும் 4 மாணவர்களும் பராம ரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த முதியோர் இல்லங்களில் பரா மரிக்கப்பட்டு வரும் முதி யோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கேட்டறிந்தார்.

    சமையல்கூடம், குளியலறை, முதியோர்களை பராமரித்துவருவது தொடர்பான பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, கொரடாச்சேரி ஒன்றியம், இலவங்கார்குடி ஊராட்சி பகுதியிலுள்ள அங்கான்வாடி மையத்தில் 0 - 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும், குழந்தை களின் உயரம், எடை குறித்து குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதை அவர் பார்வையிட்டார்.

    விளமல் ஊராட்சியில், வட்டார வள மையத்தில், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு பயிற்சி அளிப்பதை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு தரமான, சுகாதாரத்துடனான உணவினை தயாரித்து வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பயிற்சி பெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, தண்டலை ஊராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு குழந்தை களுக்கு உணவு தயா ரிக்கப்படும் சமைய லறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் குறுங்காடுகள் அமைப்பதற்கு மரக்கன்று களை நட்டு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன், மத்திய பல்கலை கழக பதிவாளர் சுலோச்சனா சேகர், குறுங்காடு கண்கா ணிப்பு அலுவலர் ரமேஷ்கு மார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

    ×