என் மலர்
நீங்கள் தேடியது "sholinganallur robbery"
சோழிங்கநல்லூர் அருகே தொழில் அதிபர் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூரை அடுத்த ஈ.சி.ஆர். சாலை பனையூர் நைனார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (40). தொழிலதிபர்.
இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு வங்கிக்கு காரில் சென்றார். வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து வந்தார்.
காரை வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் விட்டு விட்டு, பாத்திமா வீட்டிற்கு சென்றார். பணம் காரிலேயே இருந்தது.
பின்னர் காரில் இருந்த பணத்தை எடுக்க வந்தார். அப்போது கார் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கானத்தூர் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் செய்தர். போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூரை அடுத்த ஈ.சி.ஆர். சாலை பனையூர் நைனார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (40). தொழிலதிபர்.
இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு வங்கிக்கு காரில் சென்றார். வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து வந்தார்.
காரை வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் விட்டு விட்டு, பாத்திமா வீட்டிற்கு சென்றார். பணம் காரிலேயே இருந்தது.
பின்னர் காரில் இருந்த பணத்தை எடுக்க வந்தார். அப்போது கார் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கானத்தூர் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் செய்தர். போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.






