search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivraj Chouhan"

    • நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது.
    • நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் சிவராஜ் சிங் சவுகான்தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகமான மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய பிரதேச மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. பெண்கள் அவரை "மாமா" என செல்லப் பெயருடன் அழைப்பாளர்கள். அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்காமல் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை சிவராஜ் சிங் ஆறுதல் படுத்தினர்.

    முதல்வராக இல்லாத அவரின் எதிர்காலம் என்ன? கட்சி அவரை எப்படி பார்க்கும்? என்ற கேள்விகள் எழுந்தன.

    இந்த நிலையில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது சிவராஜ் சிங் சவுகான் பேசியதாகவது:-

    தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல் மந்திரிகள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்துள்ளது.

    ஆனால் நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    இவ்வாறு சிவராஜ் சிங் சவுதான் தெரிவித்துள்ளார். சிவராஜ் சிங் சவுகான் நான்கு முறை முதல் மந்திரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
    • சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது.

    சித்தி மாவட்டத்தின் பஹ்ரி அருகே உள்ள குப்ரி என்ற கிராமத்தை சேர்ந்த பிரவேஷ்சுக்லா என்பவர் தான் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தது என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரான தஸ்மத் ராவத்தும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இதற்கிடையே பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ராகுல்காந்தியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, 'குற்றவாளிக்கு மதம், சாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக அவர் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார் என்றார்.

    அதை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

    இன்று காலை பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை நாற்காலியில் உட்கார வைத்து முதல்-மந்திரி சவுகான் கீழே அமர்ந்து காலை கழுவினார். அதோடு நடந்த சம்பவத்துக்காகவும் பழங்குடியின வாலிபரிடம் முதல்-மந்திரி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

    ×