search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் முன்னாள் முதல்வர், நிராகரிக்கப்பட்ட ஒருவர் அல்ல: சிவராஜ் சிங் சவுகான்
    X

    நான் முன்னாள் முதல்வர், நிராகரிக்கப்பட்ட ஒருவர் அல்ல: சிவராஜ் சிங் சவுகான்

    • நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது.
    • நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் சிவராஜ் சிங் சவுகான்தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகமான மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய பிரதேச மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. பெண்கள் அவரை "மாமா" என செல்லப் பெயருடன் அழைப்பாளர்கள். அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்காமல் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை சிவராஜ் சிங் ஆறுதல் படுத்தினர்.

    முதல்வராக இல்லாத அவரின் எதிர்காலம் என்ன? கட்சி அவரை எப்படி பார்க்கும்? என்ற கேள்விகள் எழுந்தன.

    இந்த நிலையில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது சிவராஜ் சிங் சவுகான் பேசியதாகவது:-

    தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல் மந்திரிகள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்துள்ளது.

    ஆனால் நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    இவ்வாறு சிவராஜ் சிங் சவுதான் தெரிவித்துள்ளார். சிவராஜ் சிங் சவுகான் நான்கு முறை முதல் மந்திரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×