என் மலர்
நீங்கள் தேடியது "Shiva Shakti aspect"
- பெண்கள் மஞ்சள் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.
- தம்பதியருக்குள் ஒற்றுமையும், அன்யோன்யமும் கூடும்.
ஜோதிட ரீதியாக மாசி மாத கிரஹ நிலையை ஆராய்ந்தோமேயானால் ஒரு உண்மை புலப்படும். மாசி மாதத்தில் பௌர்ணமி தோன்றும் காலத்தில் சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். சிம்ம ராசி என்பது சூரியனின் சொந்த வீடு ஆகும். சூரியனை பித்ரு காரகன் அதாவது தந்தை என்றும் சந்திரனை மாதுர் காரகன் அதாவது தாய் என்றும் ஜோதிடர்கள் அழைப்பார்கள். மாதந்தோறும் சந்திரன் சிம்ம ராசியைக் கடந்தாலும், தந்தையாகிய சூரியனின் வீட்டில் முழு நிலவாக, பூரணத்துவம் நிறைந்த பவுர்ணமியாக தாயாகிய சந்திரன் ஒளி வீசுவது இந்த மாசி மாதத்தில் மட்டுமே நடக்கின்ற நிகழ்வு.
இதை சிவசக்தி ஐக்கியமாகவே காண்கிறார்கள் பெரியோர்கள். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
மாசிக்கயிறு மாங்கல்ய பலம் தரும் என்றழைத்தனர். அமரத்துவமும், அமிர்தத்துவமும் நிறைந்த இந்த மாசி மாதத்தில் திருமணமான பெண்கள் மஞ்சள் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.
மேலும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள், முதல் மனைவி அல்லது கணவர் இறந்ததால் மறுமணம் செய்பவர்கள் யாவரும், இந்த மாசி மாதத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்கப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வதோடு தம்பதியருக்குள் ஒற்றுமையும், அன்யோன்யமும் கூடும்.






