search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shiva abhishekam"

    பெங்களூரு சிவகங்கா என்னும் கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் இன்று நடைபெறுகிறது.
    பெங்களூருவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.

    ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கத் திருமேனி அது. இத்தல இறைவனை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். இறைவனின் திருநாமம் ‘கவிகங்காதீஸ்வரர்’ என்பதாகும். இந்தக் கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.

    அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அப்படி திருப்பித் தரும் அந்த நெய், வெண்ணெயாக மாறி இருக்குமாம். 
    தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற28-ந் தேதி சிவபெருமானுக்கு முக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.
    தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற 28-ந் தேதி(வியாழக் கிழமை) சிவபெருமானுக்கு முக்கனிகளான மா, பலா, வாழையால் பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானால் பல திருவிளையாடல் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூலவரான சொக்கநாத பெருமானுக்கு உச்சிகால வேளையில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறவுள்ளது.

    அதற்கு முன்னதாக நாளை அருணகிரி நாதர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று இரவு ஆவணி மூல வீதிகளில் அருணகிரி நாதர் புறப்பாடு நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி நிறைவடைகிறது, 7-ம் நாளான நேற்றும் 100-கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழா காலங்களில் தங்க தேர் உலா, உபயதிருக்கல்யாணம் போன்றவை நடைபெறாது.

    ஆனி பவுர்ணமி அன்று மதுரை இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரர், திருவாப்புடையார், தென் திருவாலவாய, பழைய சொக்கநாதர் ஆகிய கோவில்களிலும், திருவாதவூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள சிவன் கோவில்களில் உச்சி காலத்தில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். 
    சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    தயிரால் ஈசனை அபிஷேகித்தால் உடல் பலம், ஆரோக்கியம் பெறுவீர்கள்.

    பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வரியம் சேரும்.

    கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி ஏற்படும்.

    தேன் கொண்டு அபிஷேகித்தால் தேகம் பொலிவு பெறும்.

    மிருதுவான சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும்.

    புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பூலோக பாவம் அகலும்.



    இளநீரால் ஈசனை அபிஷேகித்தால், சகல சம்பத்துகளும் வாய்க்கப்பெறுவீர்கள்.

    ருத்திராட்சம் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆனந்த வாழ்வு அமையும்.

    அரைத்து எடுத்த சந்தனத்தால் அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

    வில்வத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் வந்து சேரும்.

    அன்னத்தால் அபிஷேகித்தால் அதிகாரம், தீர்க்காயுள், மோட்சம் கிடைக்கும்.

    திராட்சைச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

    பேரீச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் எதிரிகள் விலகுவார்கள்.

    மாம்பழத்தால் அபிஷேகித்தால் தீராத வியாதிகள் நீங்கும்.

    மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கலம் உண்டாகும்.
    ×