என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவன் கோவில்களில் முக்கனி அபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்26 Jun 2018 4:24 AM GMT (Updated: 26 Jun 2018 4:24 AM GMT)
தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற28-ந் தேதி சிவபெருமானுக்கு முக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.
தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற 28-ந் தேதி(வியாழக் கிழமை) சிவபெருமானுக்கு முக்கனிகளான மா, பலா, வாழையால் பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானால் பல திருவிளையாடல் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூலவரான சொக்கநாத பெருமானுக்கு உச்சிகால வேளையில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக நாளை அருணகிரி நாதர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று இரவு ஆவணி மூல வீதிகளில் அருணகிரி நாதர் புறப்பாடு நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி நிறைவடைகிறது, 7-ம் நாளான நேற்றும் 100-கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழா காலங்களில் தங்க தேர் உலா, உபயதிருக்கல்யாணம் போன்றவை நடைபெறாது.
ஆனி பவுர்ணமி அன்று மதுரை இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரர், திருவாப்புடையார், தென் திருவாலவாய, பழைய சொக்கநாதர் ஆகிய கோவில்களிலும், திருவாதவூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள சிவன் கோவில்களில் உச்சி காலத்தில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.
அதற்கு முன்னதாக நாளை அருணகிரி நாதர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று இரவு ஆவணி மூல வீதிகளில் அருணகிரி நாதர் புறப்பாடு நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி நிறைவடைகிறது, 7-ம் நாளான நேற்றும் 100-கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழா காலங்களில் தங்க தேர் உலா, உபயதிருக்கல்யாணம் போன்றவை நடைபெறாது.
ஆனி பவுர்ணமி அன்று மதுரை இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரர், திருவாப்புடையார், தென் திருவாலவாய, பழைய சொக்கநாதர் ஆகிய கோவில்களிலும், திருவாதவூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள சிவன் கோவில்களில் உச்சி காலத்தில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X