search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sheela Rajkumar"

    • நடிகை ஷீலா ராஜ்குமார் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல நாடகங்களில் நடித்துள்ளார்.


    ஷீலா, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 'டூ லெட்', 'திரெளபதி', 'மண்டேலா', 'நூடுல்ஸ்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான 'கும்பளங்கி நைட்ஸ்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.


    தம்பி சோழன் - ஷீலா ராஜ்குமார்

    இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்" என்று தனது கணவரின் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எதனால் ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறினார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


    • இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஷீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

    அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிருஷ்ணன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.


    துவக்க விழா

    கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் ரமணன் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சிவசங்கர் வசனம் எழுதுகிறார்.

    இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று (ஜூலை-6) நடைபெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இந்த துவக்க விழாவில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார்.


    படக்குழு

    நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சந்தோஷ், ஷீலா நடிப்பில் பல விருதுகளை குவித்திருக்கும் டூலெட் படத்தின் விமர்சனம். #Tolet #ToletReview #ToletMovieReview
    ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் மிக எளிமையாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களின் விருதுகள் முதல் தேசிய விருது வரை டூலெட் திரைப்படம் வென்றுள்ளது.

    நாயகன் சந்தோஷ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி ஷீலா, மகன் தருண். ஏழ்மையான நிலையில் இருக்கும் சந்தோஷுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில், சந்தோஷ்க்கும் வீட்டு ஓனருக்கும் பிரச்சினை வருகிறது. இதனால் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. 

    குறிப்பிட்ட நாட்களில் வீட்டை காலி செய்ய சொன்னதால், வாடகைக்கு வீடு தேடி தன் குடும்பத்துடன் அலைகிறார். அவர்களது தேடல் என்ன ஆனது என்பதே படம்.



    வளர்ச்சி என்று கூறிக்கொள்ளும் நகரமயமாக்கல் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை எளிய கதை மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் செழியன்.

    வீடு தேடி செல்லும் காட்சியில் ஒரு வீட்டில் முதியவர்களின் நிலையை பார்த்துவிட்டு திரும்பும் காட்சி, சந்தோஷ், ஷீலா தம்பதியோடு சேர்ந்து குருவிகளிடம் கூட எழும் பதற்றம், மனைவிக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நீட்டும்போது இருவரின் ரியாக்‌‌ஷன், புது வீட்டுக்கு செல்வதுபோல் மகன் நடித்து காட்டும் காட்சி என படம் நெடுக கவிதைகள்.

    சந்தோசும் ஷீலாவும் அடித்தட்டு தம்பதிகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். சினிமா கனவை துரத்த கதை எழுதும்போதும், மனைவிக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும்போதும், வீடு தேடி அலையும்போதும், சுயகவுரவத்தை சீண்டும் வீட்டு ஓனரிடம் சண்டைக்கு போகும்போதும் சந்தோஷ் கைதட்ட வைக்கிறார்.



    ஷீலா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பெரிய நம்பிக்கை. கணவனிடம் செல்ல சிணுங்கல், வீட்டு ஓனர் முன் பணிவு, வீட்டுக்குள் வந்து கோபப்படுவது, மகனை கொஞ்சுவது என்று நம் வீட்டு பெண்களை பிரதிபலிக்கிறார். தருணின் சின்ன சின்ன குறும்புகளுக்கு பின்னாலும் ஒரு அழகிய கதை இருக்கிறது.

    பின்னணி இசையோ பாடல்களோ இல்லாத படத்தில் அருள் எழிலன் வீடு காண்பிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் காட்சிகளும் சுவாரசியமாக்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவும் தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவும் நம்மை சந்தோஷ் ஷீலா வாழ்க்கைக்குள் கூட்டி செல்கின்றன. 

    மிகப்பெரிய அரசியலை எளியவர்களின் வாழ்க்கையை கொண்டு வலிமையாக சொன்ன விதத்தில் உலக சினிமாக்கள் வரிசையில் டூ லெட் இடம்பெற்று இருக்கிறது.

    மொத்தத்தில் ‘டூலெட்’ நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்.
    செழியன் இயக்கத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `டூலெட்' படத்தின் முன்னோட்டம். #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar
    ழ சினிமாஸ் சார்பில் சார்பில் பிரேமா செழியன் தயாரித்துள்ள படம் `டூலெட்'.

    சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலஷ்மி, தருண் பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், இசை - தபஸ் நாயக், தயாரிப்பாளர் - பிரேமா செழியன், எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் - செழியன்.

    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறோம் என்றார்.



    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar

    அம்சன் குமார் இயக்கத்தில் ராஜீவ் ஆனந்த் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மனுசங்கடா’ படத்தின் விமர்சனம். #ManusangadaReview #RajeevAnand
    நாயகன் ராஜீவ் ஆனந்தின் தந்தை இறந்ததாக அவருக்கு தகவல் வருகிறது. தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய கிராமத்துக்கு வருகிறார். ஊரில் இருக்கும் சாதிவெறி மக்கள் பொதுப்பாதையில் பிணத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆதிக்க சாதிக்கு ஆதரவாக செயல்பட, பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கோர்ட்டை நாடுகிறார். கோர்ட்டு உத்தரவிட்டும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை. 

    கடைசியில், ராஜீவ்வுக்கு நியாயம் கிடைத்ததா? ராஜீவின் போராட்டம் வென்றதா? அதன் பின்னணியில் நடந்த கொடுமைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக தெரியாமல் ஒரு கதாபாத்திரமாகவே ராஜீவ் ஆனந்த் தெரிகிறார். மணிமேகலை, சசிகுமார், ஷீலா, விதூர், ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் அனைவரும் அந்த ஊர் மக்களாகவே தெரிவது யதார்த்தமாக இருக்கிறது.



    செய்திகளில் அடிக்கடி தென்படும் ஒரு உண்மை சம்பவத்தை இயல்பு மாறாமல் படமாக்கி இருக்கிறார் அம்சன். குறைந்த செலவில் அழுத்தமான படைப்பு. சுடுகாட்டுக்கு பிணத்தை கொண்டு செல்லக்கூட தடுக்கும் சாதிவெறி என உண்மை சம்பவங்களை யதார்த்தமான படமாக்கி சர்வதேச பட விழாக்களில் கவனம் ஈர்த்தவர் அம்சன் குமார். பல விருதுகளை வென்ற அந்த படம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகி இருக்கிறது. அம்சன் குமாரின் முயற்சிக்கு பாராட்டுகள். 

    ‘உலகம் பூரா சுத்தி பெரிய பெரிய மனு‌ஷங்களோட போட்டோ எடுத்திக்கிட்டாலும் சொந்த கிராமத்துல செருப்பு காலால நடக்க முடியலேன்னு சொன்னவங்க தான் ஞாபகத்துக்கு வந்தாங்க’ போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.



    கதை, வசனம் இரண்டிலும் கவனம் செலுத்திய இயக்குனர் பிற தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இருந்தாலும் சாதிவெறிக்கு எதிரான அழுத்தமான பதிவு என்ற வகையில் படம் கவனத்தை ஈர்க்கிறது.

    அரவிந்த் சங்கர் இசையும், பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மனுசங்கடா’ உரிமை. #ManusangadaReview #RajeevAnand

    ×