என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seshatri Swami"

    • தந்தையின் மரணத்தால் பாதிக்கப்பட்டார்.
    • காற்றுபோல் சுதந்திரமாக சுவாமிகள் இருந்தார்.

    சேஷாத்திரி சுவாமிகள் நான்கு வயதிலேயே துதிகள், கீர்த்தனைகள் முதலியனவற்றை தாயின் மூலம் கற்றுணர்ந்தார். பின்னர் வடமொழியில் தேர்ச்சி பெற்றார். நன்னூல், நைடதம், நாலடியார் என பழம்பெரும் நூல்களை ஆராய்ந்து அறிந்து சிறுவயதிலேயே அசாதாரண குழந்தையாக விளங்கினார்.

    ஏழாவது வயதில் உபநயனம் நடைபெற்றதும் தந்தையின் மரணத்தால் பாதிக்கப்பட்டார். தந்தை அடிக்கடி கூறிவந்த 'அனுபவ ஞானமே பெரிது' என்ற சொல், அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    தவத்தாலும் இறை வழிபாட்டாலும் பொழுதைப் பொருள் உள்ளதாக மாற்றிய அவரது வாழ்க்கையில் மற்றொரு திருப்பம் நேர்ந்தது. அவரது தாய் மரண காலத்தில் சுவாமிகள் மார்பில் மும்முறை அடித்து, 'காசியந்தே மரணான் முக்தி ஸ்மரணாதருணாசலே' என்றும், 'அருணாசல, அருணாசல' என்றும் கூறியபடி தலையைச் சாய்த்தார். தாயிட்ட பேரை ஊரிட்டு அழைக்கும் என்பதுபோல் தாயிட்ட `அருணாசல நெருப்பு' அகண்டாகாரமாகப் பற்றி எரிந்தது. வீட்டில் கட்டுப்பாடு அதிகரிக்கவே, அவர் கோவிலிலும், மயான பூமியிலும் ஜபம் செய்ய ஆரம்பித்தார்.

    பித்தனைப் போல் திரிந்து, நிரந்தர இடம் என்று ஒரு குறிப்பிட்ட இருக்கையின்றி காற்றுபோல் சுதந்திரமாக சுவாமிகள் இருந்தார். அன்ன ஆகாரம் தேவையின்றி தவக்கோலம் பூண்டு திருவண்ணாமலையில் உலவினார். ரமண மகரிஷிகளின் தவத்தின் தன்மையை உணர்ந்து 'பாலயோகி' என்று சுட்டிக்காட்டி, உலகுக்கு ரமண மகரிஷியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

    அற்புதங்கள்

    சிறுவயதில் பொம்மை விற்பவரிடமிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை எடுத்தார் சேசாத்திரி சாமிகள். அதன்பிறகு அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்தன. இதுபோன்ற வியாபார இடங்களுக்கு சேசாத்திரி சாமிகள் சென்றால் அந்நாளில் அக்கடையில் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதனால் சேசாத்திரி சாமிகளை "தங்க கை சேசாத்திரி சாமி" என்று அழைத்தனர்.

    ஒருநாள் இரவு நேரத்தில் உணவு விடுதியில் நுழைந்து மைதா மாவு மூட்டையினை அடுக்கி வைத்த இடத்திலிருந்து எடுத்து, தண்ணீர் பீப்பாயில் கொட்டிவிட்டார். சாமிகளின் செயலைக் கண்டு பதறிய உணவு விடுதி ஆட்கள் அவரைத் துரத்திவிட்டனர். இரவு நேரத்தில் அவர் மூட்டையளவு மாவை வீண் செய்ததாக வருத்தப்பட்டனர். ஆனால் சற்று நேரத்தில் ஒரு வாகனம் நிறைய ஆட்கள் வந்து அருகில் சர்க்கஸ் அமைக்க வந்திருப்பதாகவும், உணவு வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அவர் கொட்டிய மாவு அனைத்துமே உணவானது. இச்செய்தி அனைத்து உணவு விடுதிக்காரர்களுக்கும் சென்று அனைவரும் சுவாமிகளின் வருகையை எதிர்பார்த்திருந்தனர்.

    பாலாஜி சுவாமிகளை குருவாக ஏற்று மந்திர உபதேசமும், சன்னியாசமும் பெற்றார்.

    ×