search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serakulam"

    • நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 21)
    • சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    செயங்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 21). இவர் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு நெல்லை மாவட்டம் இட்டடி அருகே மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துவிட்டு கடைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    இதில் காளிதாஸ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சேரகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த காளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான தாழையூத்து ரெயில்வே பீடர் ரோடு சேர்ந்த நல்லையா (40) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×